நமக்கு ஒவ்வொரு குருபூஜை நிறைவும் அதன் சத்சங்கம் மிகவும் முக்கிய பாதையை வகுக்கும். ஒவ்வொரு ஆண்டும் நம்மை மென்மேலும் உயர்ந்து ஆன்ம இறை அனுபவத்தை நமக்கு தருவதை சிவாவின் கருணை ஒருபோதும் தவறியது இல்லை. அதுபோல ஒரு முறை நமக்கு சிவாவின் அபிஷேக க்ரமங்களில் சந்தேகம் வந்தபோது சிவா நமக்கு அருளிய பாடல். இது மிகவும் நேர்த்தியாக வசன நடையும் வெண்பா நடையிலும் வெளிப்பட்டது. அதன் யோகா விளக்கமும் உரைநடையும் இங்கே ஓர் முயற்சியாக திருவருள் நடத்தட்டும். பாடல் : குருவரும் கூடும்தானே நாட்டமுடன் நல்லதொரு எண்ணெய் கொண்டு நால்வேதம் வரித்துத் தந்த கலசநீர் காட்டி கசடற மாபொடி திரவியம் தேய்த்து களிப்புற பல நீரும் இளநீரும் பாரு பாங்காக பசும்பால் தயிர்தான் சாற்றி பார்த்து மிகத் தேனும் பலகனியும் சர்க்கரையும் காட்டி பரிவுடனே வாசியது இடம்தான் வைத்து பாசமுடன் கங்கைநீர் கலசம் காட்டி பணிவுடனே சுகந்தமிகு பன்னீரும் சந்தனமும் பல்வேறு பாடலும் கோஷமும் இட்டு பார்த்துவந்த மலர்தான் மாற்றி பக்தியுடன் படிப்படியாய் பூதி வைத்து கோலமுடன் மேளமிட்டு...
- Get link
- X
- Other Apps