
இதில் வரும் வரிகளில் உள்ள மிக நுட்பமான வாசியோக பயிற்சியினை நமக்கு சிவா மகா அன்னதானத்தின் போது வெளிப்படுத்தி அருளினார்.
அவற்றைப் நாம் சற்று தெளிவுபட இங்கு பார்ப்போம்
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இதில் ஔவை ஆறாதாரத்து அங்குச நிலையும் என குறிப்பிடுகின்றாள் ஆகவே 6 ஆதாரங்கள் ஒருவகையான அங்குசம் என்னும் ஓர் ஆயுதம் போல செயல் படுகின்றன என்பது விளங்கும்.
இதில் இவ்வாறான அங்குச பயிர்ச்சி மேற்கொண்டு உள்ளே செல்வோர்க்கு ஏற்படும் நிலையினை அடுத்த வரியில் விளக்குகின்றாள்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
எவருக்கும் வசப்படாத இந்த மனம் சதா சர்வ காலம் பேசிக்கொண்டே இருக்கின்றபடியால் இதனை பேரா என்று சொல்லி அவ்வாறு மனத்தினை "பேச்சுரை யறுத்தே" என்ற மோன நிலைக்கு கொண்டு செல்லும் ஓர் அற்புத பயிற்சியை நமக்கு தந்தருளினாள்
இந்த பயிற்சியை நாம் ஓர் சுத்தமான இடத்தினை தேர்வு செய்து ,நம்மை முழுதும் தளர்வு படுத்தி ,இடதும் வளதும் இல்லாமல் சுவாசம் சமமாக செல்லும்படியாக ஓர் நிலை செய்வித்து .நம் முழு கவனம் புருவ மத்தியின் கண் வைத்து உணர்வினை கூட்டி இந்த அங்குசம் அமைப்பினை உருவக படுத்தி


Comments