குரு நாதனின் நாமம் சிவா

 


குரு நாதனின் நாமம் சிவா




 மா மறை போற்றும் சிதம்பரமே
என்னை வா என்று அழைக்கும்
உன் சிவபுரமே..

குரு நாதனின் நாமம் சிவா
என்றதுமே அங்கே நாட்டம் 
கொண்டால் பேரானந்தமே.

மா மறை போற்றும் சிதம்பரமே
என்னை வா என்று அழைக்கும்
உன் சிவபுரமே.!

அகத்தியர் கண்ட காவேரியாம்
அதன் கொள்ளிடம் கரைதனை
கொண்டவராம்

திரு நல்லூர் கரையின் மறுபுறமாம்
எங்கள் ஆனந்த தாண்டவன் அனுக்கபுரம்

மா மறை போற்றும் சிதம்பரமே
என்னை வா என்று அழைக்கும்
உன் சிவபுரமே.!

காசியும் காஞ்சியும் போகவேண்டாம் அங்கே 
கருணையின் உருவத்தை தேட வேண்டாம்.

கண்கண்ட குருவாய் அமர்ந்த நம் 
குருநாதனே இங்கே சிவம் மானார் 

மா மறை போற்றும் சிதம்பரமே
என்னை வா என்று அழைக்கும்
உன் சிவபுரமே.!

சித்தர்கள் பாதையில் வந்தவராம்
எங்கள் சித்தத்தில் சிவமாய் அமர்த்தவராம்.

 அன்பெனும் அருளை பெறுவோமே 

குருநாதனின்  பாதம் பணிவோமே ..

                                                   ஓம் குரு நாதா! ஓம் குரு நாதா! 

ஓம் குரு நாதா! ஜெயா ஜெயா நாதா !!

ஓம் குரு நாதா! ஓம் குரு நாதா! 

ஓம் குரு நாதா! ஜெயா ஜெயா நாதா !!

ஓம் குரு நாதா! ஓம் குரு நாதா! 

ஓம் குரு நாதா! ஜெயா ஜெயா நாதா !!


 



Comments